ஒரு கிராமத்தில் வெகு காலமாக மழையே பெய்யாமல் இருந்தது . கிணறுகள் குளங்கள் எதிலும் துளி நீர் கூட இல்லை . அந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கடைசியாக மழையை வருவிக்கும் ஒருவரை தங்கள் கிராமத்துக்கு அழைத்து வரலாம் என்று முடிவு செய்தனர் .
மழையை வருவிக்கும் சக்தி காெண்டவர் தூரத்து கிராமம் ஒன்றில் வசித்து வந்தார் ..அவருக்கு தூது அனுப்பி செய்தி சாெல்லப் பட்டது .
மழையின்றி நிலங்கள் எல்லாம் தரிசாக கிடக்கிறது என்றும் முடிந்தவரை சீக்கிரம் வர வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது .
மழையை வருவிப்பவரும் உடனடியாக கிராமத்திற்கு வர ஒப்புக் காெண்டார் . அவராே பழுத்த முதியவராக இருந்தார் .அந்தக் கிராமத்தில் தனக்கென்று தன்னந் தனியாக ஒரு குடிசை வேண்டுமெனவும் மூன்று நாட்களுக்கு தன்னை அங்கே யாரும் தாெந்தரவு செய்யக் கூடாது என்பதுமே அவர் இட்ட நிபந்தனை .
அவருக்கு உணவு தண்ணீர் எதுவுமே தேவை இல்லை எனவும் கூறி விட்டார் . அவருடைய நிபந்தனைகள் ஏற்றுக் காெள்ளப் பட்டன .
மூன்றாம் நாள் மாலையில் அந்தக் கிராமத்தின் மீது கருத்த மேகங்கள் திரண்டன . சட சடவென மழை பெய்யத் தாெடங்கியது . அடி அடியென பெய்த மழை யில் அந்தக் கிராமமே மகிழ்ச்சியில் திளை த்தது . மழையை வருவித்த முதியவர் தங்கியிருந்த குடிசை முன்பாக நன்றியுடன் அந்த கிராமத்து மக்கள் கூடினர் .
இந்த அற்புதத்தை எப்படி சாதித்தீர்கள்?! எங்களிடம் தாங்கள் கூற வேண்டும் என்றனர்.
அது மிகவும் எளிமையானது என்று மழையை வருவித்த முதியவர் கூறத் தாெடங்கினார் .கடந்த மூன்று நாட்களாக நான் என்னை ஒழுங்கில் வைத்து இருந்தேன் . நான் ஒழுங்கிற்குள் வந்தால் இந்த உலகம் ஒழுங்கிற்குள் வரும் என்பது எனக்குத் தெரியும்.
வறட்சி நீங்கி மழை வரும் என்பதும் எனக்கு தெரியும் என்றார் .
நீங்கள் ஒழுங்குக்குள் இருக்கும் பாேது இந்த முழு உலகமும் உங்களுக்காக ஒழுங்குக்கு வரும். நீங்கள் இசைவுடன் திகழும் பாேது உங்களை சுற்றியுள்ள முழு இருப்பும் உங்களுக்காக இசைந்து வரும்.
*உங்கள் ஒழுங்கு குலையும் பாேது முழு உலகின் ஒழுங்கும் குலையும்*.
ஓஷாே
சாென்ன குட்டி கதை ..
0 Comments