காம உணர்வு பற்றி ஓஷோ

.
*#கேள்வி* : ஓஷோ , உங்களை ஏன் ' ஒரு காமச்சாமியார் ' என்று மக்கள் கருதுகிறார்கள் ?

*#ஓஷோபதில் : " நீங்கள் ஒரு உடலுறவு வைத்தியரிடம் ( Sex - Doctor ) சென்றால் அவர் உடலுறவைப் பற்றி பேசாமல் புத்தரைப் பற்றியா பேசுவார் !

 அப்பொழுது அவரை ' நீங்கள் , *#காமவைத்தியர்* ' என்றால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இந்த முட்டாள்கள் என்னை அழைக்கிறார்கள் !😜😝 அதற்கு நான் என்ன செய்வது ?
.
என்னிடம் வரும் பெரும்பான்மையான கேள்விகள் , " என்னால் தியானம் செய்ய முடியவில்லை . பெண்கள் துரத்தித் துரத்தி வருகிறார்கள் . தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது காமம் அதிகரிக்கிறது , என்ன செய்வது ?'

, ' சுய இன்பம் உடலுக்குக் கெடுதலா ?' , ' சுய இன்பம் பாபகாரியமா ' , ' இதிலிருந்து விடுதலை அடைவது எப்படி ?' ......இப்படியேதான் இருக்கின்றன !

நானும் பழைய மதவாதிகளைப் போல , ' அது பாவம் , இது தீங்கு , இது தெய்வக் குற்றம் , கண் போய்விடும் .....' அப்படி , இப்படி என்று மேம்போக்காகச் சொல்லி உங்களிடம் குற்ற உணர்வை ஏற்படுத்தலாம் .

 ஆனால் அது என்னால் முடியாத காரியம் . பாலுணர்வு மற்றும் அதனுடைய பல பரிமாணங்களைப் பற்றி கூறுகிறேன் .

நான் காமச்சாமியாரா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் .
.
( 1 ) . பசி உணர்வும் , பாலுணர்வும் இயற்கை மனிதனுக்கு கொடுத்த அடிப்படையான உணர்வுகள் . மற்ற உணர்வுகள் அனைத்தும் இவற்றுக்கு அடுத்ததுதான் . இதில் பசி உணர்வு தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் , பாலுணர்வு தன் இனத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும் தேவையாக இருக்கிறது . இவற்றில் பாலுணர்வை எல்லா பழைய மதங்களும் கண்டிக்கின்றன . இதற்கு முக்கிய காரணம் இது மிகவும் உணர்வு மயமானது . உணர்வு மேலோங்கும்பொழுது அறிவு வேலை செய்யாது . இதனால்தான் பெற்றோர்களும் , சமூகமும் காதலுக்கு எதிராகவே இருக்கிறது . ஏனெனில் சாதிக்கட்டுப்பாடு மிகுந்த அந்தக் காலத்தில் இது வெறுத்து ஒதுக்கப்பட்டதாக இருந்தது . ஏன் இப்பொழுதும் கிராமங்களில் சாதிப்பற்று மிக அதிகம் . வாழ்க மனு !
.
(2) . அறிவை மழுங்க வைக்கும் இந்த உணர்வு சமூகத்துக்கு ஆபத்தானது என்று எல்லா மதங்களும் ஒருசேர கண்டிக்கின்றன . ஆனால் இயற்கை இயற்கை இதற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறது ! தாயின் வயிற்றில் உள்ள குழந்தைக்கே குறி விரைக்கிறது என்று டாக்டர்கள் கண்டறிந்திருக்கிறார்கள் ! என்னுடைய அணுகுமுறையே புரிந்துகொள்ளுதல்தான் . அடக்குதலோ , கண்டித்தலோ அல்ல . அந்த வகையில் பார்க்கும்பொழுது , ஒரு குழந்தை பாலுணர்வால்தான் ஆக்கப்பட்டிருக்கிறது . ஒரு குழந்தை என்பது பாலுணர்வின் ஒட்டுமொத்த உருவம் ! இதை எந்த மதவாதியும் மறுக்க முடியாது .
(3) ஒரு குழந்தை எந்த அளவுக்குப் பாலுணர்வால் நிரப்பப்பட்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஆண்மையும் பெண்மையும் கலந்து அழகும் அறிவும் நிரம்பி இருக்கும் . மிகச்சிறந்த அறிவாளிகள் , அதிகமான பாலுணர்வு கொண்டவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது ! அதைப்போல மிகச்சிறந்த கலைஞர்கள் மற்றும் புதுமையைப் படைப்பவர்கள் , மிகச் தைரியசாலிகள் எல்லாம் பாலுணர்வு மிக்கவர்கள் . சுருக்கமாகச் சொன்னால் இந்த உயிரினத்தையே ஆட்டிப்படைக்கும் இந்தத் தெய்வீகப் பாலுணர்வைப் பற்றி நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டாமா ? இதை நான் உங்களுக்குப் புரியும்படியாகச் சொல்லுவது தவறா ?
.
(4) ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள் . உங்கள் சக்தி அனைத்தும் பாலுணர்வு சக்திதான் . அதன் வெளிப்பாடுதான் வேறு வேறு விதமாக இருக்கிறது . ஆன்மீகத்தைப் பொறுத்தவரையில் இந்த சக்தி , கீழான நிலையில் பாலுணர்வாகவும் , மேலான நிலையில் தியானமாகவும் இருக்கிறது . மற்ற வெளிப்பாடுகள் எல்லாம் இந்த இரண்டுக்கும் இடையேதான் பல பரிமாணங்களில் அமைந்திருக்கின்றன . இப்பொழுது பாலுணர்வைப் பற்றி ஆழமாகப் பார்ப்போம் .
.
(5) . பாலுணர்வை நீங்கள் எவ்வளவு தீவிரமாக அடக்குகிறீர்களோ அவ்வளவு தீவிரமாக ஆழமாக அது உங்கள் பிரக்ஞையற்ற மனதில் ( Unconcious Mind ) சென்றுவிடுகிறது . இந்த அடக்குதல் உங்களிடம் தீவிரமான ஆவலை ஏற்படுத்துகிறது . அப்பொழுது உங்கள் கண்கள் முழுவதும் காமம் தான் வழியும் . நீங்கள் பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்கும் இந்தப் போலிச்சாமியார்களின் கண்களைச் சற்று உற்று பாருங்கள் புரியும் ! அதிகமான காம உணர்வு அதிகமான கற்பனையால் விளைகிறது . நீங்கள் அழகானவள் என்று நினைக்கும் ஒரு பெண்ணையோ .....நீங்கள் அழகானவன் என நினைக்கும் ஒரு ஆணையோ நெருங்கிச் சற்று ஆழமாகப் பாருங்கள் . அப்பொழுது உங்கள் கற்பனையான அதீத அழகு மறைந்து உண்மை தெரிய ஆரம்பிக்கும் . இந்தச் சஞ்சலத்துக்கு நம் மனம்தான் காரணம் என்று புரிந்து திடுக்கிடுவீர்கள் !
ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று சொல்வதற்கு இதுதான் முக்கிய காரணம் . ஒருசில தவறுகள் நடக்கலாம் . ஆனால் இந்த முறை மிகவும் வரவேற்கத்தக்கது . ஒரு பெண்ணின் அழகு , அவளுக்கும் ஒரு ஆணுக்கும் உள்ள தூரத்தைப் பொறுத்தது . தூரம் அதிகமாக அதிகமாக அழகு கூடும் ! தூரம் குறையக் குறைய அழகும் குறையும் ! இதை உங்கள் அனுபவத்தில் புரிந்துகொள்ளலாம் .
.
(6) இந்த பூனா ஆசிரமத்தில் 100 -க்கு 90 சதவிகித ஆண்களும் பெண்களும் நட்பு முறையிலேயே பழகுகிறார்கள் . மீதமுள்ள 10 சதவிகித பேர்கள் பாலுணர்வால் உந்தப்பட்டால் , அவர்களாகவே இதை விட்டு வெளியேறி விடுகிறார்கள் . பிறகு அவர்கள் சமநிலை அடைந்து திரும்புகிறார்கள் . ஆண்களும் , பெண்களும் கூடும் இடத்தில் இது தவிர்க்க முடியாததுதான் . ஆனால் , இங்கு அதீத கவர்ச்சியும் இல்லை ; காமமும் இல்லை . எப்பொழுது , ஒரு இயற்கையான உணர்வை அங்கீகரித்து , அதைப் புரிந்துகொண்டு அதனுடன் இயைந்து விழிப்புணர்வாகச் செல்கிறோமோ அப்பொழுது நம்மிடம் ஒரு சமநிலை (Balance ) ஏற்படுகிறது . இந்த ஆசிரமத்தில் அந்த சமநிலையில்தான் பெரும்பாலோர் இருக்கிறார்கள் .
ஆரம்பத்தில் இங்கு வரும் ஆணும் , பெண்ணும் காம உணர்வு மிக்கவர்களாகவே இருக்கிறார்கள் . ஆகவேதான் , முதலில் வரும் வெளியாட்கள் இந்த ஆஸ்ரமத்தைப் பார்த்து அருவருப்பு அடைகிறார்கள் ; திடுக்கிடுகிறார்கள் . இவர்கள்தான் இங்கு 'எல்லாம் நடக்கிறது ' என்று பிரச்சாரம் செய்பவர்கள் . இதற்கு காரணம் நான் அல்ல . உங்களுடைய மதகுருமார்களும் , பாதிரிமார்களும்தான் ! ஆரம்பத்தில் வருபவர்கள் கொஞ்ச நாட்கள் இங்கு இருந்தால் அவர்களிடம் ஒரு சமநிலை ஏற்படுகிறது . பிறகு அவர்களிடம் அமைதியும் ஆழ்ந்த இன்பமும் ஏற்படுகிறது . பெண்களின் கவர்ச்சி மெல்ல மெல்ல தேய ஆரம்பிக்கிறது . இதை ஒருவர் அனுபவத்தில்தான் புரிந்துகொள்ள முடியும் .
.
(7) . பாலுணர்வு நான்கு நிலைகளைக் கொண்டது . இதைச் சற்று ஆழ்ந்து புரிந்து கொள்ளுங்கள் . அதைப் பற்றியெல்லாம் உங்கள் மதகுருமார்கள் ஒருக்காலும் சொல்லமாட்டார்கள் . ஏனெனில் இது தீண்டத்தகாத சமாச்சாரம் ( Untouchable Matter ) .
.
( a) முதல் நிலை : சுய பாலுணர்வு ( Auto Sexual).
.
ஒரு குழந்தை முதலில் தன் அழகிய உடலை மிகவும் நேசிக்கிறது . தன் கட்டைவிரலை சூப்பும்பொழுது அதற்கு மிகுந்த மனநிறைவு ஏற்படுகிறது . பிறகு வயது ஏற ஏற அது தன் பாலியல் உறுப்போடு விளையாடுகிறது . அப்பொழுது அது பேரானந்தம் கொள்ளுகிறது . ஆனால் அதன் முக்கியத்துவம் அதற்குத் தெரியாது . இது இயற்கையான உணர்வு . இதில் எந்தத் தவறும் இல்லை . பெற்றோர்கள் வீணாகக் குழப்பம் அடைய வேண்டாம் . நீங்கள் செய்ய வேண்டியது அந்தப் பாலுருப்பையும் , கைவிரல்களையும் சுத்தம் செய்து வைத்திருத்தல்தான் . தயவு செய்து அதைக் கண்டிக்காதீர்கள் . அடிக்காதீர்கள் . ( இந்த அடக்கு முறையே பயமாக , அருவருப்பாக ஆழ்மனதில் பதிகிறது )
.
இன்னும் சிறிதளவு வயது கூடி சுமார் 3 - லிருந்து 4 - வயதாக இருக்கும்பொழுது இது ஏதோ பழக்கமாகிவிடுமோ என்று அஞ்சி சமூகம் அவன்மேல் பாய ஆரம்பிக்கிறது . ' அதைத் தொடாதே , அது அசிங்கம் , பார்ப்பவர்கள் உன்னை வெறுப்பார்கள் ......' இப்படிச் சொல்லி கண்டிக்க ஆரம்பித்து விடுவார்கள் . அவர்கள் கோபத்தில் அவனை அடிக்கிறார்கள் . அவன் புரியாமல் பெற்றோர்மேல் கோபம் கொள்ளுகிறான் . மறுக்க ஆசைப்படுகிறான் . அது முடியாததால் அழ ஆரம்பிக்கிறான் . தன் மகிழ்ச்சியில் இவர்கள் குறுக்கிடுகிறார்கள் என்று வஞ்சம் கொள்ளுகிறான் . ஒருவித குற்ற உணர்வு அவனுடைய ஆழ்மனதில் பதிய ஆரம்பித்துவிடுகிறது . பிறகு அவன் பாசாங்கு செய்கிறான் . பொய் சொல்ல ஆரம்பிக்கிறான் . மொத்தத்தில் அவன் ஒரு தேர்ந்த தந்திரசாலியாகிறான் . அவன் பெற்றோர்களை ஏமாற்ற நினைக்கிறான் . நல்ல நடிகனாகிவிடுகிறான் ! இப்பொழுது பெற்றோர்கள் அவனை ( அல்லது அவளை ) முழுமையாகக் கெடுத்துவிட்டார்கள் - நல்லவனாகத் திருத்த நினைத்து !
.
இந்த நிலையிலேயே பெரும்பாலோர் நின்றுவிடுகிறார்கள் . இதனால் என்ன நேரிடுகிறது ? இந்த உலகம் முழுவதும் சுய இன்பம் ( Masturbation) காணுதல் பரவலாகக் காணப்படுகிறது ! இதனால் மருத்துவம் இதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டியதாகிறது . ஆனால் இது பெரும்பாலும் திருமணத்திற்குப் பிறகு மறைந்துவிடும் . ஆனால் வாலிபத்தில் பாலுணர்வு இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முடியாது . விந்து முந்தி வருவதைக் கட்டுப்படுத்த முடியாது . இதனால் மணவாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும் .
அத்துடன் இவர்களில் சிலர் பரம்பரை நாட்டு வைத்தியர் என்று சொல்லிக்கொண்டு , ' சுய இன்பம் உங்கள் அறிவை மங்கச் செய்யும் , ஆண்மையைப் பாதிக்கும் , கண்பார்வை மங்கும் , உடல் இளைக்கும் .....' என்று பல குற்ற உணர்வுகளை உங்களிடம் விதைப்பார்கள் . இந்தக் குற்ற உணர்வு உங்கள் ஆழ்மனதில் பதிந்து அவர்கள் சொல்லியபடியே வேலை செய்துவிடும் !
சுய இன்பத்தால் ஏற்படும் விந்து இழப்பில் எந்த சத்துப்பொருளும் கிடையாது ! ஆனால் விந்து மெதுவாக வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் . இது ஒன்றுதான் பிரச்சினை . இதற்குத் தகுந்த டாக்டரைப் பார்த்தால் சரி செய்துவிடலாம் . இப்பொழுது நல்ல மருந்துகள் இருக்கின்றன
.
ஆகவே குழந்தைகள் அதன் இயல்பிலேயே தைரியமாக வளர அனுமதியுங்கள் . வயது ஏற ஏற அவனிடம் மெல்ல மெல்ல விழிப்புணர்வும் புரிந்துகொள்ளுதலும் கூடுகிறது . ஒன்றை கவனித்திருக்கிறீர்களா ? சிறு பிள்ளைகள் கிட்டிப்புல் , சடுகுடு போன்ற விளையாட்டுக்களில் மிக மிக ஆர்வமாக இருக்கிறார்கள் . ஆனால் சுமார் 10 - லிருந்து 14 வயது காலத்தில் அது எப்படி மறைகிறது ? அந்த ஆர்வம் எங்கே போயிற்று ? பிறகு ஏனோதானோ என்று பார்த்த ஆண் , பெண் பார்வையில் எப்படி ஒரு ஆழம் , ஒரு கவர்ச்சி ஏற்படுகிறது ? எல்லாம் ஹார்மோன் செய்யும் வேலைதான் ! ஆகவே பழக்கம் எல்லாம் வயதுக்கு ஏற்ற மாதிரிதானே மாறும் . ஆனால் இதில் ஒருசில விதிவிலக்குகளும் உண்டு ! அதைப் பார்த்து சஞ்சலப்பட வேண்டாம்
.......அதைப் பார்த்து சஞ்சலப்பட வேண்டாம் .......
.
ஓரினச்சேர்க்கை ( Homosexual ).
.
இப்பொழுது அந்தக் குழந்தையை அதன் இயல்பிலேயே விட்டால் , தன் உடலில் தானே இன்பம் காணுவதிலிருந்து மாறி தன் தன் இனத்தைச் சேர்ந்த பிற ஆண் / பெண் உடலை நேசிக்கும் . இது சுமார் 14 - லிருந்து 18 வயதில் இருக்கும் . ஆனால் இதில் பெரும்பாலோர் ஈடுபடுவதில்லை . காரணம் அந்த மனதுடையவர்கள் கிடைப்பது கடினம் . பெரும்பாலோர் முதல் கட்டத்திலேயே நின்றுவிடுவார்கள் . மேலும் இதைச் சமூகம் ஒருக்காலும் அனுமதிப்பது இல்லை . அப்பொழுது அவர்கள் அந்த நபரை நினைத்துக்கொண்டு சுய இன்பம் காணுகின்றனர் . ஆனால் ஒரு சிலர் கூடி வாழவும் செய்கின்றனர் . இதற்கு அவர்களது உடலில் உள்ள பாலுணர்வு ஹார்மோன்களும் பெரும்பங்கு வகிக்கின்றன . ஆனால் 100 - க்கு 95 சதவிகித மக்கள் அடுத்த கட்டத்துக்குத் தானே செல்லுகின்றனர் .
.
c ) . மாற்று இனச் சேர்க்கை ( Heterosexual )
.
பிறகு இந்த மூன்றாவது மாற்று இனச்சேர்க்கை இயல்பாக உண்டாக ஆரம்பிக்கிறது . ஆனால் உடனே இதற்குச் சமூகம் இடம் கொடுப்பது இல்லை . முக்கியமாக ஆண் பொருளாதாரத்தில் தனித்து நிற்க முடியுமா என்று பார்க்கிறது . ஒரு ஆணை அவன் சம்பாதிப்பதை வைத்து தேர்ந்தெடுக்கிறது . ஆனால் காதலிப்பது என்பது ஆண் / பெண்களிடையே சகஜமாகிறது . இதற்குச் சமூகம் மிகப்பெரிய முட்டுக்கட்டை போடுகிறது . காரணம் பல இருக்கின்றன . ஆனால் அவர்களிடம் ஒரு இனம் புரியாத கவர்ச்சி ஏற்படுகிறது .
இயற்கை தன் விளையாட்டை மிகத் தாராளமாகவே அவர்களிடம் செய்திருக்கிறது ! இப்பொழுது கவிதை , ஆடல் , பாடல் , ஓவியம் , சிற்பம் என்று எல்லாக் கலைகளும் பிறக்கின்றன . ஆண் , பெண்ணில் கரைய நினைக்கிறான் . பெண் , ஆணில் கரைய நினைக்கிறாள் . அப்பொழுது உடல் இரண்டாக இருந்தாலும் ஆன்மா ஒன்றுகிறது . இதுதான் மனமற்ற நிலையின் அகங்காரமற்ற தன்மையின் முதல் அனுபவம் எனலாம் .
ஒரு பெண் கலவியின்போது உச்ச இன்பத்தில் மனம் செயல்படாமல் கண்டபடி கத்துவாள் . ' ஐயோ என்னைக் கொல்லாதே !' என்றுகூட கூவுவாள் . இது ஏன் ? உச்ச இன்பத்தில் அவள் இறப்புணர்வையும் தொடுகிறாள் . காரணம் மனம் பூரணமாக இறக்கிறது !
.
d). பிரம்மச்சரியம் ( Celibacy ) :
.
மேற்கண்ட நிலையை உணர்ந்த பிறகு , எப்படி ஒரு ஆண் / பெண் மற்றவர் துணையில்லாமல் அந்த நிலையை அடைவது என்று ஒரு ஆவல் இயல்பாக ஏற்படும் . ஏனெனில் ஒருவரைச் சார்ந்து இருப்பது துன்பத்தையும் அடிமைத்தனத்தையும் கொடுக்கும் . ஆகவே இந்த மாற்று இனச்சேர்க்கையில் உச்சத்தன்மையை அடைந்தவர்கள் வேறு முறைகளின் மூலம் - உதாரணமாக யோகம் , தந்திரா தாவே ( TAO) மூலம் அதை அடைய முடியுமா என்று முயற்சி செய்கிறார்கள் . ஆன்மீகத்தில் இது சாத்தியம்தான் ! ஏனெனில் ஒரு ஆணின் மன ஆழத்தில் ஒரு பெண்ணும் , ஒரு பெண்ணின் மன ஆழத்தில் ஒரு ஆணும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் . அதற்கு முக்கிய காரணம் அவர்களது பிறப்புக்கு ஒரு ஆணும் பெண்ணும்தான் காரணம் . ஆகவே , ஒவ்வொரு ஆணும் / பெண்ணும் , பாதி ஆணாகவும் / பாதி பெண்ணாகவுமே இருக்கிறார்கள்.
அப்பொழுது தன்னுள்ளே உள்ள ஆணோடு ஒரு பெண்ணும் அடுத்து தன்னுள்ளே உள்ள பெண்ணோடு ஒரு ஆணும் சேரக்கூடாது ? நீங்கள் வெளியே உள்ள ஆணோடு அல்லது பெண்ணோடு சேரும்பொழுது உங்கள் உள்ளே உள்ள பெண்ணோடு / ஆணோடுதான் சேர்ந்து உண்மையான கலவி இன்பத்தை அனுபவிக்கிறீர்கள் . அப்பொழுது வெளியே உள்ள மாற்றுப் பாலினத்தவர் வெறும் தூண்டுகோலாகவே இருக்கின்றனர் .
.
உங்களிடம் ஆண்மை இல்லாதபொழுது விந்து சுரக்காதபொழுது உங்களை எந்த அழகியாலும் தூண்ட முடியாது . கிளர்ச்சி அடையச் செய்ய முடியாது . அடுத்து இப்பொழுது அந்த உணர்வோடு உங்கள் தியானத் தன்மையைக் கலக்கவும் . அதாவது அந்த இன்ப உணர்வை ஒரு சாட்சியாக நின்று பார்க்கவும் . இதற்கு மிகுந்த பயிற்சி வேண்டும் . இதுதான் உண்மையான பிரம்மச்சரியம் . இந்த நிலையில் வெளிப்படையான காமம் முற்றிலும் மறைந்துவிடுகிறது .
இப்பொழுது உங்களுக்கு வெளியில் எந்த ஆணும் / பெண்ணும் தேவையில்லை . இது ஒரு நிரந்தரமான திருமணம் ! இப்பொழுது உங்களால் நினைத்த நேரத்தில் அந்த உச்சத்தன்மையைத் தொட முடியும் . ஒரு புத்தர் அந்த நிலையில் தொடர்ந்து இருக்க முடியும் .
இப்பொழுது சிற்றின்பம் , பேரின்பமாக மாறுகிறது !
.
நான் இப்பொழுது அந்த நிலையில்தான் இருக்கிறேன் . அந்த நிலைக்கு உங்களையும் அழைக்கிறேன் . அந்த நிலையை அடைந்தவன் ஒருக்காலும் பிற பெண்களை அல்லது பெண்ணானால் ஆண்களைக் காமத்தோடு பார்க்க முடியாது . ஏனெனில் அது தேவையில்லை . என் கண்களைப் பாருங்கள் புரியும் !
என்னுடைய காம அனுபவங்கள் எல்லாம் பல பிறவிகளின் ஞாபகங்கள்தானே தவிர , இந்தப் பிறவியில் எனக்கு எந்த அனுபவமும் இல்லை . நான் பல பிறவிகளில் புத்தாவாகவும் , ஜோர்பாவாகவும் இருந்திருக்கிறேன் . இந்தப் பிறவி நான் ஞானமடைவதற்காகவே ஏற்பட்டது . இனிமேல் எனக்குப் பிறப்பு இல்லை . இதுதான் என் கடைசிப்பிறவி " ...
.
அன்பர் ஒருவரின் கேள்வி :

ஓஷோ , நான் அறிந்துகொண்ட வரையில் தியானத்திற்கு பெண்

இன்பம் ( Sex ) தடையாகவே இருக்கும் என்று கூறும்

பௌத்தத்திலிருந்து , தந்திரா எப்படி வளர முடியும் ?
.
பதில் : " புத்தர் சொன்னது தவராகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது .

அவர் குறிப்பிட்டது என்னவென்றால் ,

ஒருவன் தியானத்திற்குள் ஆழமாகச் செல்ல ,

அவன் பெண் இன்பத்தைக் கடந்து செல்லவேண்டும்
என்பதுதான் .

ஆனால் மக்கள் அதைப் புரிந்துகொள்ளாமலே கடந்து செல்வதற்குப் பதிலாக ,

அதனோடு சண்டைபோட ஆரம்பித்துவிட்டார்கள் .

நீங்கள் அதைப் புரிந்துகொள்ள அதை நட்புடன் அணுக வேண்டும் .

அதனுடன் சற்று இணைந்து செல்லவேண்டும் .

பௌத்தம் , இந்த உலகத்தில் உள்ள மிகச்சிறந்த ஆன்மீகத் தன்மையுள்ள மதங்களில் ஒன்றாகும் .

இப்படி மக்கள் பாலுணர்வைத் தவறாகப் புரிந்துகொண்டு ,அதற்கு எதிராகச் சென்றாலும் அதனுடன் சண்டை போட்டாலும் ,

அது உங்களை எதிர்க்க ஆரம்பிக்கும் .

அது உங்களை முழுமையாக ஆக்கிரமிக்க முனையும் .

இந்த மிகவும் வலுவான சக்திமிக்க பாலுணர்வை
அடக்கி யாரும் வென்றதாகச் சரித்திரம் இல்லை .

உங்களுடைய சந்நியாசிகள் உடலுறவைப்பற்றி மிக அதிகமாகவே கனவு காண்பவர்கள் .

பகலில் அதை மறுப்பதுபோல வேடம் போடுவார்கள் .

ஆனால் இரவில் பல பெண்களுடன் கனவுலகில் இருப்பார்கள் !

அது இப்பொழுது அவர்களது மன ஆழத்திலிருந்து வருகிறது .

பகலில் பிரக்ஞையாக அதை அவர்கள் அடக்கி வைத்திருக்கலாம் .

ஆனால் இரவில் தூங்கும்பொழுது பிரக்ஞை நிலை மறைய கனவு நிலை மேலே வருகிறது .

ஒன்றை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள் .

அடக்கப்பட்டவை அனைத்தும் மிக ஆழமாக அங்கேயேதான் இருக்கும் .

அதிலிருந்து உங்களால் விடுபட முடியாது .

ஆனால் வெளியிடப்பட்டவை அனைத்தும் மெல்ல மறைந்துபோகும் .

புத்த சந்நியாசிகளுள் , பெண் சந்நியாசிகளும் இருந்திருக்கிறார்கள் .

எல்லோருமே பாலுணர்வைப் புரிந்து வைத்திருந்தார்கள் ; கடந்து சென்றிருக்கிறார்கள் .

பெண் இன்பம் , தியானத்திற்கு ஆரம்பத்தில் எதிராக இருக்கலாம் .

ஆனால் அதைப் புரிந்துகொண்டால் , அதைத் தியானத்திற்கு ஒரு ஏணியாக மாற்றிக்கொள்ளலாம் .

பெண் இன்பம் என்பது தியானத்தில் கீழான படிகள் ; அவ்வளவுதான் .

அதையே *#தந்திரா* மூலம் மேலான நிலைக்குக் கொண்டு செல்லலாம் .

தேவை , மிகுந்த விழிப்புணர்வு .
.*#ஓஷோ*
நன்றி-amuthasurabhii.blogspot

Post a Comment

0 Comments