காதலில் மலர்தல்

 காதலில் மலர்தல்.... ❤


💓காதலின் முதல்பாடம்...

காதலை கேட்பது அல்ல...

காதலைக் கொடுப்பது...


♥️கொடுப்பவர் ஆகுங்கள்...

ஆனால்,

மக்கள் நேர் எதிராகச் செய்கிறார்கள்...


'கொடுக்கும்போது கூட...


அது திரும்பவேண்டும் என்ற

எண்ணத்துடன்தான் கொடுக்கப்படுகிறது...'


இது ஒரு பேரம்.


🌸அவர்கள் பகிர்ந்து கொள்வதில்லை...


தங்கு தடையின்றி பகிர்ந்து கொள்வதில்லை...


ஒரு நிபந்தனையோடு

பகிர்ந்து கொள்கின்றனர்...


🌸ஒரு மூலையில் கவனித்துக் கொண்டே இருக்கின்றனர்...


அது திரும்ப வருகிறதா, இல்லையா என்று பார்க்கின்றனர்...

இந்த மிகப் பாவப்பட்ட மக்கள் !


🌸"காதலின் இயற்கையான

இயக்கம் என்ன?

என்று அவர்களுக்குத் தெரியவில்லை...


நீங்கள் பொழியுங்கள்...

அது வரும்.


🌸அப்படி வரவில்லையா?

எதற்கும் கவலைப்பட வேண்டாம்...


ஏனென்றால், காதலன் அறிவான்,

காதலிப்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு என்று...


அது வருகிறதா? நல்லது.

மகிழ்ச்சி பன்மடங்கு ஆகிறது.


💗ஒரு போதும் திரும்பி

வரவில்லையென்றாலும் கூட...


'காதலித்தல்' என்ற செயலிலேயே

நீங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்...

பரவசம் கொள்வீர்கள்...


யார் கவலைப்படுகிறார்கள்.

வருகிறதா, இல்லையா என்று?


💜காதல், 'தனக்கே உரித்தான

சொந்த உள்ளார்ந்த மகிழ்ச்சியைப்' பெற்றிருக்கிறது...


நீங்கள் காதலிக்கும்போது அது நிகழ்கிறது.


💚பலனை எதிர்பார்த்துக்

காத்திருக்கத் தேவையே இல்லை.


மெல்ல மெல்ல மிகுதியாகக்,

காதல் உங்களை நோக்கித் திரும்ப

வருவதை நீங்கள் காணலாம்...


💘ஒருவன் காதலிக்கிறான்...


காதலைப் பற்றி அறிந்து கொள்கிறான்...


காதலிப்பதன் மூலம்...

அதில் நீந்துவதன் மூலம்...


நீச்சல் கற்பதுபோல்,

காதலிப்பதன் மூலம் காதல் கற்கப்படுகிறது...


💖மக்கள் மிகவும் கஞ்சத்தனமானவர்கள்...


யாராவது பெரிய காதலி கிடைப்பதற்க்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்...


சும்மா காத்திருக்கிறார்கள்...


எங்கிருந்தாவது கிளியோபாட்ரா வருவாள்...


பிறகு தங்கள் இதயத்தைத் திறக்கலாம்

என்று இருக்கிறார்கள்...


💖ஆனால், நாளைடைவில்...

அவர்கள்....

எப்படி இதயத்தை திறப்பது என்பதையே...

முற்றிலும் மறந்து போய் விடுகிறார்கள்...


💕காதலின் ஒரு வாய்ப்பைக்

கூட இழக்காதே...


தெருவில் செல்லும்போது கூடக்

காதலிக்க முடியும்...

பிச்சைக்காரனைக் கூட

காதலிக்க முடியும்...


அவனுக்கு ஏதாவது நீங்கள்

கொடுத்துத்தான் ஆக வேண்டும்

என்று கட்டாயமில்லை...


குறைந்தபட்சம் நீங்கள் சிரிக்கலாமே,

அதற்குச் செலவில்லையே...


💓ஆனால், அந்தப் புன்சிரிப்பே உங்கள் இதயத்தைத் திறக்கிறது...


உங்கள் இதயம் அதிக

உயிர்த்துடிப்புப் பெறுகிறது...


❤️யாரவது ஒருவரின் கையைப் பிடியுங்கள்...

இதயத்தில் மலருங்கள்...


நண்பர் அல்லது புதியவர்...


சரியான ஆள் கிடைத்தால்தான்,

அன்பு செய்யமுடியும் என்று

காத்திருக்காதீர்கள்...


அப்படியென்றால் சரியான ஆள்

கிடைக்கவே மாட்டான்.


💛வாழ்க்கையில்,

அன்பு செய்து கொண்டே செல்லுங்கள்...


எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ,

அவ்வளவு அதிகமாக,

'சரியானவர்' கிடைப்பது சாத்தியம் ஆகும்...


💚ஏனென்றால்,

உங்கள் இதயம் மலரத் தொடங்குகிறது...'


💖ஆனால், நீங்கள் மிகத் தவறான வழியிலே பயிற்சி கொடுக்கப்படுகிறீர்கள்...


முதலில், ஒவ்வொருவரும் தான் ஏற்கனவே

ஒரு காதலன் அல்லது காதலி என்கிற தவறான மனப்பதிவோடு வாழ்கிறீர்கள்...


'ஒருவர், காதலன் அல்லது காதலி ஆவது

என்பது அவ்வளவு எளிதானது அல்ல'


ஆம்.


அதில் ஒரு உள்ளார்ந்த

ஒரு ஆற்றல் உள்ளது.


அந்த உள்ளாற்றல் பயிற்சி

கொடுக்கப்பட வேண்டும்...


🌹ஒரு விதை இருக்கிறது...

அது பூவாக வேண்டும்...


நீங்கள் உங்கள் விதையை

எடுத்துக் கொண்டே செல்லலாம்...


ஒரு தேனீ கூட வராது.


🌸எப்போதாவது விதைகளை

நோக்கித் தேனீக்கள் வருவதைக் கண்டிருக்கிறீர்களா?


அவைகளுக்கு, விதைகளிலிருந்துதான்

பூக்கள் வருகின்றன என்று தெரியாதா?


ஆனால், பூக்களாக ஆகும்போதே

அவை வருகின்றன...


🌹பூவாக மலருங்கள்...

விதையாக தங்கிவிடாதீர்கள்.


--ஓஷோ--

💗அதி உன்னத வழி.

Post a Comment

0 Comments